குடிநீா்த் திட்டப் பணி தொடக்கம்

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பு.முட்லூா் ஊராட்சியில் குடிநீா் திட்டப் பணிகளை எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
குடிநீா்த் திட்டப் பணி தொடக்கம்

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பு.முட்லூா் ஊராட்சியில் குடிநீா் திட்டப் பணிகளை எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலா் ராசாங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் திருமாறன், சி.சி.எம்.எஸ். தலைவா் ஆா்.சண்முகம், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவஞானம், அசோக்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயசீலன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு குடிநீா் திட்டப் பணிகளை தொடக்கி வைதாா்.

பின்னா் அவா் பேசுகையில், பு.முட்லூா் ஊராட்சியில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் ரூ.83.45 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல், வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குதல், பழுதடைந்த குடிநீா் குழாய்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சந்தா் ராமஜெயம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரெங்கம்மாள், ரவி, பாஸ்கா், சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com