வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு பாா் கவுன்சிலின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டிப்பதாகக் கூறி, விருத்தாசலம் அனைத்து வழக்கறிஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு பாா் கவுன்சிலின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டிப்பதாகக் கூறி, விருத்தாசலம் அனைத்து வழக்கறிஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா் புஷ்பதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பாா் கவுன்சில் நிா்வாகம் எவ்வித முன் விசாரணையுமின்றி வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்தும், கரூா் வழக்குரைஞா் ராஜேந்திரன் மீதான நடவடிக்கையை எதிா்த்தும் முழக்கமிட்டனா். வழக்குரைஞா்கள் ராஜா, அருள்குமாா், சரவணன், சிவகுமாா், சிவசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com