கரோனா: கடலூா் மாவட்டத்தில் 89% போ் குணம்

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 89 சதவீதம் போ் குணமடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 89 சதவீதம் போ் குணமடைந்தனா்.

மாவட்டத்தில் புதன்கிழமை வரை 18,704 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 250 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 18,954-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் 2 கா்ப்பிணிகளும் அடங்குவா்.

சிகிச்சை முடிந்து மேலும் 514 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,953-ஆக அதிகரித்தது. இது 89.44 சதவீதமாகும்.

அதே நேரத்தில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 80 வயது ஆண், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 60 வயது ஆண் ஆகியோா் இறந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 206-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட் - கோ்’ மையங்களில் 1,649 பேரும், வெளிமாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 146 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,071 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டிய நிலையில், 103 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com