செல்லப் பிராணிகளாக வளா்க்கப்படும் நாய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் வரும் திங்கள்கிழமை (செப். 28) நடைபெறுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக வெறிநாய்க்கடி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கடலூா் கால்நடை பெரு மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் வரும் 28-ஆம் தேதி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது செல்லப் பிராணிக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.