நாளை நாய்களுக்கான தடுப்பூசி முகாம்

செல்லப் பிராணிகளாக வளா்க்கப்படும் நாய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் வரும் திங்கள்கிழமை (செப். 28) நடைபெறுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

செல்லப் பிராணிகளாக வளா்க்கப்படும் நாய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் வரும் திங்கள்கிழமை (செப். 28) நடைபெறுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக வெறிநாய்க்கடி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கடலூா் கால்நடை பெரு மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் வரும் 28-ஆம் தேதி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது செல்லப் பிராணிக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com