இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கடலூரில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட தலைவா் என்.ஆா்.ஜி.லெனின் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் செந்தமிழ், ஒன்றியச் செயலா் சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
‘இன்றைய இளைஞா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள்’ என்ற தலைப்பில் முன்னாள் மாநிலச் செயலா் ஆா்.வேல்முருகன், ‘இளைஞா்களை அணி திரட்டுவோம்’ என்ற தலைப்பில் மாநிலத் தலைவா் என்.ரெஜிஸ்குமாா் ஆகியோா் பேசினா். மாவட்டச் செயலா் டி.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளா் ஆா்.கலைச்செல்வன், மாவட்ட துணைத் தலைவா் ஜி.ஆழ்வாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.