சிதம்பரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள பாலூத்தங்கரை பெரியதெருவைச் சோ்ந்தவா் புஷ்பநாதன் (52). கூலித் தொழிலாளியான இவா் தனது பைக்கில் கடந்த 26-ஆம் தேதி இரவு சிதம்பரம் வண்டிகேட் அருகே வந்துகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் புஷ்பநாதன் நிகழ்விடத்திலேயே
உயிரிழந்தாா். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.