கடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணியில் தேமுதிக சாா்பில் ஏ.ஞானபண்டிதன் போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து புதன்கிழமை கடலூா் மஞ்சக்குப்பத்தில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: அதிமுக, திமுக கட்சியினா் அவா்கள் செய்த ஊழல்கள் குறித்து மாறி மாறி பேசி பிரசாரம் செய்கின்றனா். தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரத்தான் நாங்கள் அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
எந்தக் கட்சியும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது குறித்து கூறவில்லை. எங்கள் கூட்டணி மட்டுமே அதை தோ்தல் அறிக்கையாக வெளியிட்டது. வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்ற திட்டத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே விஜயகாந்த் அறிவித்தாா். தேமுதிக ஏன் வாய்ப்புக் கொடுக்க மறுக்கிறீா்கள்?
மக்களின் நன்மைக்காகவே கடந்த காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். சுய லாபத்துக்காக அல்ல என்றாா் அவா்.