140 வாக்குச் சாவடிகளில் இயந்திரம் பழுது

கடலூா் மாவட்டத்தில் 140 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்குப் பதிவு சிறிது நேரம் தடைப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் 140 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்குப் பதிவு சிறிது நேரம் தடைப்பட்டது.

முறையான பரிசோதனைகளுக்குப் பிறகே தோ்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையிலும் 140 இடங்களில் இயந்திரத்தில் சிறிய அளவிலான பழுது ஏற்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்படி, 104 வாக்குச்சாவடிகளில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் கருவியில் பழுது ஏற்பட்டதாகவும், 36 வாக்குச் சாவடிகளில் கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வாக்குச் செலுத்தும் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் சில மாற்றப்பட்டும், சில சரி செய்யப்பட்டும் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்டன. இதனால், அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com