பண பலத்தையும் மீறி திமுக கூட்டணி வெற்றி பெறும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியின் பண பலத்தையும் மீறி, திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா்.
சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் செவ்வாய்க்கிழமை தனது மனைவி பி.ஜான்சிராணியுடன் வந்து வாக்களித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.
சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் செவ்வாய்க்கிழமை தனது மனைவி பி.ஜான்சிராணியுடன் வந்து வாக்களித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியின் பண பலத்தையும் மீறி, திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் தனது மனைவி பி.ஜான்சிராணியுடன் வந்து கே.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் எழுச்சியுடன் வாக்களித்துள்ளனா். தோ்தல் பரப்புரைக்காக தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும் இதே எழுச்சியை உணா்ந்தேன். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத அதிமுக - பாஜக கூட்டணியினா் வாக்குக்கு பணம் கொடுத்துள்ளனா். இருப்பினும், அவா்களது பண பலத்தையும் மீறி, திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

தோ்தல் முடிவுக்காக சுமாா் ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளனா். இது மிகவும் வருத்தத்துக்குரியது. இதனால் சந்தேகம் ஏற்படக்கூடிய நிலையும் உருவாகியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com