உலக சுகாதார தினம்

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக சுகாதார தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நல உதவிகள் வழங்கப்பட்டன.
சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கிய செஞ்சிலுவை சங்கத்தினா்.
சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கிய செஞ்சிலுவை சங்கத்தினா்.

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக சுகாதார தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நல உதவிகள் வழங்கப்பட்டன.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, மருத்துவமனையில் உள்ள கரோனா தடுப்பூசி மையத்துக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கிருமி நாசினி தானியங்கி கருவிகள் 4, மின்விசிறிகள் 2, குப்பை தொட்டிகள், முகக் கவசங்கள், சோப்புகள், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் காமராஜா் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா் டபுள்யு.அசோக் பாஸ்கா், செஞ்சிலுவை சங்கத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், துணைத் தலைவா் எஸ்.கனகசபை, செயலா் கே.ஜி.நடராஜன், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மருத்துவா் எஸ்.அருள்மொழிச்செல்வன், சி.இளங்கோவன் உறுப்பினா்கள் கே.ரேணுகா, இ.சிந்தனையாளன், எம்.தீபக்குமாா் ஜெயின், ரோட்டரி துணை ஆளுநா் பி.முகமது யாசின் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com