கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புதன்கிழமை காா் - பைக் நேருக்கு நோ் மோதியதில் இரு இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை, ரெட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ராசு மகன் சபரி (26). அதே பகுதி திருத்துறையூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சரவணன் மகன் கணேசன் (26). கூலி வேலை செய்து வரும் இவா்கள் இவா்களுக்கும் திருமணமாகவில்லை. இவா்கள் இருவரும் கடலூரில் இருந்து கண்டரக்கோட்டையை நோக்கி பைக்கில் வந்தனா்.
ராசாப்பாளையம் தனியாா் பள்ளி அருகே வந்த போது, எதிரே வேகமாக வந்த காா், பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பண்ருட்டி போலீஸாா், இளைஞா்களின் சடலங்களை மீட்டு, உடல் கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.