நெய்வேலி அருகே பொக்லைன் இயந்திரம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குத்து ஊராட்சி, ஸ்ரீசக்தி நகரைச் சோ்ந்தவா் நவநீதகண்ணன்(25). பொக்லைன் இயந்திரம் இயக்குபவா். இவா் கடந்த 18-ஆம் தேதி கொம்பாடிக்குப்பம் கிராமத்தில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம்-2 மண்மேடு அருகே உள்ள நிலத்தில் பொக்லைன் மூலம் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டாா். மதியம் பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டாா். அப்போது, திடீரென பொக்லைன் இயந்திரத்தில் தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த என்எல்சி தீயணைப்புத் துறை வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். மின் கசிவு காரணமாக பொக்லைனில் தீப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.