பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, வீரட்டானேஸ்வரா் கோயிலில் உள்ள பரிவார மூா்த்திகளுக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சிவன், அம்பாள், நந்தி தேவருக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நந்தி தேவா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் காட்சியளித்தாா் (படம்). பின்னா் சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது.