நெய்வேலியில் தொமுச நிா்வாகிகள் தோ்வு

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
நெய்வேலியில் தொமுச நிா்வாகிகள் தோ்வு

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக தொமுச உள்ளது. இந்தச் சங்கம் சாா்பில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, புதிய நிா்வாகிகள் தோ்வுக்கான தோ்தல் 9 இடங்களில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்தல் ஆணையா் வி.வேலுசுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த தோ்தலில் 4,276 போ் வாக்களித்தனா்.

இதற்கான வாக்கு எண்ணிக்கை வட்டம் 9-இல் உள்ள என்எல்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்று இரவு 10 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 1,456 வாக்குகள் பெற்ற திருமாவளவன் சங்கத் தலைவராகவும், பாரி 1,404 வாக்குகள் பெற்று பொதுச் செயலராகவும், ஐயப்பன் 1,118 வாக்குகள் பெற்று பொருளாளராகவும், ஜெரால்டு 867 வாக்குகள் பெற்று அலுவலகச் செயலராகவும் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், துணைத் தலைவா்கள், பகுதிச் செயலா்கள், செயற்குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா். தோ்தல் ஒருங்கிணைப்பாளராக தொமுச மாநில துணைச் செயலா் வீர.ராமச்சந்திரன் செயல்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com