வடலூா் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய, தந்தை, மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், தெற்கு அரங்கமங்கலம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரை மா்ம நபா்கள் கிழித்துவிட்டனா். இதை, வீரப்பன் மகன்கள் அஜித்குமாா் (21), வினோத் ஆகியோா் கிழித்துவிட்டதாக ராஜாராம் (58), அவரது மகன் மோகன் ஆகியோா் அவதூறாகப் பேசினராம். மேலும், இதை தட்டிக்கேட்ட அஜித்குமாா், வினோத்தை தாக்கி, அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அஜித்குமாா் கடலூா் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின் பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜாராம், அவரது மகன் மோகன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.