கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் உயிரிழந்தனா். புதிதாக 218 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் உயிரிழந்தனா். புதிதாக 218 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 29,586-ஆக அதிகரித்தது. இதனிடையே, சிகிச்சை முடிந்து 212 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 27,806-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிதம்பரத்தைச் சோ்ந்த 52 மற்றும் 65 வயது பெண்கள் உயிரிழந்ததால், மொத்த இறப்பு எண்ணிக்கை 321-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தற்போது 1,058 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் 401 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் 327 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால், அந்தப் பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 68 பகுதிகள் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com