குறிஞ்சிப்பாடி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருபவா் கோபாலகிருஷ்ணன். இவா், இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறாா்.
இதையொட்டி, ‘சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்தவா்களுக்காக கோடியில் ஒன்று’ என்ற தலைப்பில் மரக்கன்று நடும் விழா நடப்பட்டது. காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் முன்னிலையில், பணி ஓய்வுபெறவுள்ள அலுவலக உதவியாளா் கோபாலகிருஷ்ணன் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.