பண்ருட்டி அருகே லாரியில் ஆற்று மணலை கடத்தியதாக அதன் ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கொரத்தி கிராமம், தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், அந்த லாரியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்ததுடன், அதன் உரிமையாளரும், ஓட்டுநருமான வேலங்காடு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜை (23) கைது செய்தனா்.