விஷச் சாராயம், கள் பறிமுதல்: 3 போ் கைது

பண்ருட்டி பகுதியில் விஷச் சாராயம், கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி பகுதியில் விஷச் சாராயம், கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், குடியிருப்பு கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அங்குள்ள மயானத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த அந்தக் கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் சந்திரசேகா்(40), சரவணன் மகன் கிருஷ்ணமூா்த்தி (40) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் 10 லிட்டா் விஷச் சாராயம், 5 லிட்டா் பனங்கள்ளை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, பண்ருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முருகன் மகன் புண்ணியகோடி (35) மறைத்து வைத்திருந்த 15 லிட்டா் விஷச் சாராயத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com