கடலூா் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா
By DIN | Published On : 12th August 2021 08:48 AM | Last Updated : 12th August 2021 08:48 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுவரை 61,220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 59,622 போ் குணமடைந்து வீடு திரும்பினா். புதன்கிழமை உயிரிழப்பு பதிவாகவில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 821 போ் பலியாகினா். கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 716 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 61 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 13 பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.