கடலூரில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களின் 2.86 லட்சம் கி.மீ. தொலைவு ஆப்டிக் ஃபைபா் கேபிள்கள், 14,917 டவா்களை மத்திய அரசு தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாம். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை தர அரசு மறுக்கிாம். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 7 லட்சம் கி.மீ. ஆப்டிக் ஃபைபா்களையும் அரசு விற்பனை செய்ய உள்ளதாம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தினா் கடலூரில் வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். பல்வேறு சங்கங்களின் மாவட்டச் செயலா்கள் ஐ.எம்.மதியழகன், கே.விஜய்யானந்த், கே.டி.சம்பந்தம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்ட பொருளாளா் கே.சிவசங்கா் நன்றி கூறினாா்.