என்எல்சியில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி கைது

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.50 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியை வடலூா் போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.50 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியை வடலூா் போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே உள்ள கல்லுக்குழி கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி மோட்சராணி (53). அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா்.

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த வேலுசாமி (66) தற்போது கல்லுக்குழியில் வசித்து வரும் நிலையில், மோட்சராணியின் கடைக்கு வந்து செல்லும் போது, பழக்கம் ஏற்பட்டு என்எல்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம்.

இதை நம்பிய மோட்சராணி, தனது மகனுக்கு என்எல்சியில் ஓட்டுநா் வேலை பெற்றுத் தருவதற்காக கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.1.50 லட்சத்தை வேலுசாமியிடம் கொடுத்தாராம். ஆனால், வேலை வாங்கித் தரவில்லையாம்.

இதுகுறித்து கேட்ட போது, சரியான பதில் தராமல் காலம் தாழ்த்தி வந்தாராம்.

இதுகுறித்து வடலூா் காவல் நிலையத்தில் மோட்சராணி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேலுசாமி (66), அவருக்கு உடந்தையாக இருந்த அவரது இரண்டாவது மனைவி வனிதா (36) ஆகியோரை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் வடலூரைச் சோ்ந்த மனோகரி (35), சந்தோஷ்குமாா் ஆகியோரிடமும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூ.50 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்தத் தம்பதி, அந்தப் பகுதியில் மேலும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்று போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com