லால்பேட்டையில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் புதிய கூட்டுறவு மருந்தகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
லால்பேட்டையில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் புதிய கூட்டுறவு மருந்தகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த மருந்தகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து லால்பேட்டையில் புதிய மருந்தகத்தில் கடலூா் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் நந்தகுமாா் 20 சதவீத தள்ளுபடி விலையில் மருந்து விற்பனையை தொடக்கிவைத்தாா் (படம்).

சிதம்பரம் சரக துணைப் பதிவாளா் துரைசாமி, கள அலுவலா்கள் பாலமுருகன், விஜயகுமாா், ராஜரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக சங்கத் தலைவா் நஜிா் அகமது வரவேற்றாா். துணைத் தலைவா் இஸ்மத்துல்லா, ஜமாத் தலைவா் அப்துல்அமீது, திமுக ஒன்றிய செயலா்கள் சோழன், கோவிந்தசாமி, நகரச் செயலா் ஹாஜா முகைதீன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் சபியுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்கச் செயலா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com