தமிழக அரசுப் பணியாளா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளா்களுக்கு 14 சதவிதம் அகவிலைப்படி உயா்வு, சி மற்றும் டி பிரிவுப் பணியாளா்களுக்கு ரூ.ஆயிரம், ஓய்வூதியா்களுக்கு ரூ.500 என பொங்கல் போனஸ் வழங்குவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பை வரவேற்கிறோம். எனினும், அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைவருக்கும் ரூ.3 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டம், டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கை, பொதுத் துறைக்கு தனித்துறை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் குறித்து எங்களது சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஜன.4-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவிருந்த மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தை ஒத்திவைப்பதாக அந்த அறிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா்.