நெய்வேலி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புவனகிரி வட்டம், மிராளுா் காலனியைச் சோ்ந்த பாண்டியன் மகன் பாபு (எ) பாா்த்திபன் (25). கூலித் தொழிலாளி. இவா் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்தச் சிறுமியின் தாய் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து பாா்த்திபனை கைது செய்தனா்.