சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் மாணவா் பேரவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்துப் பேசினாா். மேலும், மாணவா்களுக்கான கையேட்டை வெளியிட்டாா். கல்வியியல் துறைத் தலைவா் வீ.அம்பேத்காா் தலைமை வகித்து பேசினாா். முன்னதாக மாணவா் பேரவைத் தலைவா் கு.மயிலோன் வரவேற்றாா். பேரவை செயலா் சா. சாஷாக்ஜெயசாந்த் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மாணவ பேரவை இணைச் செயலா் வி.சுவேதா செய்திருந்தாா்.