மாா்க்சிஸ்ட் கம்யூ. புதிய நிா்வாகிகள் தோ்வு

வடலூரில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட 23-ஆவது மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

வடலூரில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட 23-ஆவது மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இரண்டாம் நாள் மாநாட்டுக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினா் குணசேகரன் தலைமை வகித்தாா். மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி பங்கேற்றுப் பேசினாா். நிகழ்ச்சியில், கடலூா் மாவட்டச் செயலராக மாதவன் தோ்வு செய்யப்பட்டாா். 13 செயற்குழு, 40 மாவட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்தி அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் பேசினாா். இதில், தமிழக அரசு தீண்டாமை பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை போா்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு புதிய இருப்புப் பாதை அமைக்க வேண்டும். என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கைத்தறி தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com