மீன்பிடி விசைப்படகு கட்டுவதற்கு ரூ.30 லட்சம் மானியம்

 மீன்பிடி விசைப்படகு கட்டுவதற்கு மானியம் வழங்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

 மீன்பிடி விசைப்படகு கட்டுவதற்கு மானியம் வழங்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீன்பிடி விசைப்படகு கட்டும் திட்டத்தின் கீழ், படகுக்கான செலவினத்தில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தைச் சாா்ந்த முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவா்கள் அதிகபட்சம் 6 போ் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவா் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

விண்ணப்பப் படிவத்தை மீன்வளத் துறையின் ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, மீன்வளத் துறை ஆணையா், கால்நடை பராமரிப்பு - மீன்வளத் துறை ஒருங்கிணைந்த கட்டடங்கள், 3- ஆவது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், 571-அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600 035 என்ற முகவரிக்கு நிறைவு செய்த விண்ணப்பத்தைப் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற பிப்ரவரி 14- ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரைமீன்பிடி படகின் வரைபடம் தகுதி வாய்ந்த கப்பல், மீன்பிடி கலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து பெற்று அசலாக இணைக்கப்பட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு கடலூரிலுள்ள மீன்வளம் - மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com