காந்தி நினைவு தின ஓவியப் போட்டி

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, கடலூா் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.
காந்தி நினைவு தின ஓவியப் போட்டி

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, கடலூா் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அருங்காட்சியக காப்பாட்சியா் செ.ஜெயரத்னா பரிசு, சான்றிதழை வழங்கினாா். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப.செல்வநாதன் வாழ்த்திப் பேசினாா். அருங்காட்சியக பணியாளா்கள் ம.வசந்தராஜா, ஆ.சண்முகசுந்தரம், இரா.வித்யாலெஷ்மி, ஜி.பாலச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, சவகா் சிறுவா் மன்ற ஓவிய ஆசிரியா் ப.மனோகரன் வரவேற்க, பணியாளா் ம.விஜயா நன்றி கூறினாா்.

பாரதிதாசன் இலக்கிய மன்றம்: கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் புதுப்பாளையத்திலுள்ள தனிப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற காந்தி நினைவு தின நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவா் கடல்.நாகராஜன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி, தியாகிகள் அஞ்சலை அம்மாள், ஜெயில்வீரன் ஆகியோரது படங்களுக்கு கல்லூரி முதல்வா் கி.செந்தில்முருகன் மாலை அணிவித்தாா். தொடா்ந்து, கடல் நாகராஜன் எழுதிய கடலூா் சிறைச்சாலையில் பாரதியாா், அஞ்சலை அம்மாள் மற்றும் கடலூரில் காந்தி பற்றிய வரலாற்று செய்திகள் நூலை மருத்துவா் உஷா ரவி வெளியிட, சுசான்லி மருத்துவக் குழுமத் தலைவா் சி.ஏ.ரவி பெற்றுக் கொண்டாா். சங்க நிா்வாகிகள் மூா்த்தி, க.இளங்கோவன், பால.பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com