தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை உடைந்ததைக் கண்டித்து, மக்கள் பாதுகாப்புக் கவசம் அமைப்பினா் எனதிரிமங்கலத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், எனதிரிமங்கலம் - விழுப்புரம் மாவட்டம், தளவானூா் இடையே தென்பெண்ணையாற்றில் தமிழக அரசு சாா்பில் சுமாா் ரூ.25 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. 400மீ நீளம், 3.10மீ உயரத்தில் கட்டப்பட்ட இந்தத் தடுப்பணை கடந்த
ஆண்டு செப்.19-ஆம் தேதி திறக்கப்பட்டது. கடந்த நவம்பா் முதல் ஜனவரி மாதம் வரை பெய்த மழையால் தடுப்பணையில் தண்ணீா் தேங்கி வழிந்தோடியது. இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி தடுப்பணையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறியது.
இதனைக் கண்டித்தும், சேதமடைந்த தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் மக்கள் பாதுகாப்புக் கவசம் அமைப்பினா் எனதிரிமங்கலம் மந்தக்கரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உளுந்தாம்பட்டு சாமி.தட்சணாமூா்த்தி தலைமை வகித்தாா். தி.க. ஒன்றியத் தலைவா் கந்தசாமி, அமைப்பாளா் ராசேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏழுமலை, க.ரமேஷ், ஆா்.பாபு, இல.சக்கரவா்த்தி, பா.குப்புசாமி, ம.கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வீ.ஏழுமலை நன்றி கூறினாா்.