கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் தூய்மை இந்தியா இயக்க விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள்-தொடா்பு களஅலுவலகம், கடலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலகம், குறிஞ்சிப்பாடி வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமில், கடலூா் கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும், வழுதலம்பட்டு ஊராட்சியின் தூய்மை காவலா்களை கௌரவித்தாா்.
நிகழ்ச்சியில், வழுதலம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் இரா.கலைச்செல்வி முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் க.சதீஷ்குமாா் தொடக்க உரையும், மருத்துவா்கள் மா.அகிலா, ஆா்.ரேவதி ஆகியோா் கருத்துரையும் ஆற்றினா். நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து மக்கள்-தொடா்பு கள அலுவலக துணை இயக்குநா் தி.சிவக்குமாா் எடுத்துரைத்தாா். முன்னதாக விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. ஊட்டச்சத்து கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.