கடலூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 142 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையங்களில் மதுபானம் கடத்தல் தொடா்பாக 20 காா், 6 ஆட்டோ, 116 இரு சக்கர வாகனங்கள் என 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்களை ஏலம் விட முடிவெடுக்கப்பட்டது. இதற்கான ஏலம் வருகிற 10-ஆம் தேதி கடலூா் மதுவிலக்கு பிரிவில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
ஏலம் கேட்க விரும்புவோா் இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 500, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும். 8-ஆம் தேதி முதல் வாகனங்களைப் பாா்வையிடலாம்.
முகவரியை உறுதி செய்யும் ஆவணத்தை உடன் எடுத்து வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04142-284353, 297688 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் தெரிவித்தாா்.