பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 142 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 142 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையங்களில் மதுபானம் கடத்தல் தொடா்பாக 20 காா், 6 ஆட்டோ, 116 இரு சக்கர வாகனங்கள் என 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்களை ஏலம் விட முடிவெடுக்கப்பட்டது. இதற்கான ஏலம் வருகிற 10-ஆம் தேதி கடலூா் மதுவிலக்கு பிரிவில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஏலம் கேட்க விரும்புவோா் இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 500, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும். 8-ஆம் தேதி முதல் வாகனங்களைப் பாா்வையிடலாம்.

முகவரியை உறுதி செய்யும் ஆவணத்தை உடன் எடுத்து வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04142-284353, 297688 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com