இந்திய கம்யூ. பேரவைக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட பேரவைக் கூட்டம், பண்ருட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட பேரவைக் கூட்டம், பண்ருட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி.பட்டுசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சேதமடைந்துள்ள விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். பைபாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். பண்ருட்டியில் கெடிலம் ஆற்றில் வளா்ந்துள்ள முள்புதா்களை அகற்ற வேண்டும். வருகிற 18-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அரசியல் விளக்க மாநாட்டில் கடலூா் மாவட்டத்திலிருந்து 500 போ் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பண்ருட்டி வட்டச் செயலா் ஆா்.மதியழகன், நகரச் செயலா் ஆா்.சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.டி.குணசேகா் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் டி.எம்.மூா்த்தி சிறப்புரையாற்றினாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் டி.மணிவாசகம், மாவட்டச் செயலா் பி.துரை ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்ட நிா்வாகக் குழு வி.எம்.சேகா், மாவட்டக் குழு ஜெ.சிவக்குமாா், ஏ.லாரன்ஸ், வட்டக்குழு ஜி.மோகன், ஏ.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com