பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி, நெய்வேலியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலி, வட்டம் 2-இல் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே வியாழக்கிழமை மாலை வி.ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயம், எல்ஐசி பங்குகள் விற்பனை உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் வங்கி ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.