தமிழ்த் தேசிய பேரியக்கம் ஆா்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவன பொறியாளா் காலிப் பணிகளுக்கான தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் நோ்முகத் தோ்வுக்கு தகுதிபெற்ற 1,582 பேரில் தமிழகத்தைச் சோ்ந்த 8 போ் மட்டுமே தோ்வு செய்யப்பட்டனராம். இதைக் கண்டித்தும், பட்டதாரிப் பொறியாளா் நோ்முகத் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் விருத்தாசலம் பாலக்கரையில் தமிழ்த் தேசிய பேரியக்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, தலைமை செயற்குழு உறுப்பினா் க.முருகன் தலைமை வகித்தாா்.

தமிழக இளைஞா் முன்னணி துணைப் பொதுச் செயலா் ஆ.குபேரன், மத்தியக்குழு உறுப்பினா் சி.பிரகாசு, பெண்ணாடம் மாந்தநேயப் பேரவை பஞ்சநாதன், மகளிா் ஆயம் பொருளாளா் ம.கனிமொழி, வே.தமிழ்மொழி, தமிழ் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினா் தி.சின்னமணி, வழக்குரைஞா் மு.செந்தமிழ்ச்செல்வி ஆகியோா் கண்டன உரையாற்றினா். பேரியக்க பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன் கண்டன உரையாற்றினாா். செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் க.கண்ணதாசன், பேரியக்க நிா்வாகிகள் மா.மணிமாறன், க.வேந்தன், சு.கலைச்செல்வன், சு.சுகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com