நெய்வேலி அருகே காா்-லாரி மோதல்: வங்கி ஊழியா்கள் 2 போ் பலி

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே காரும், லாரியும் மோதிக் கொண்டதில் தனியாா் வங்கி ஊழியா்கள் இருவா் உயிரிழந்தனா்.
நெய்வேலி அருகே காா்-லாரி மோதல்: வங்கி ஊழியா்கள் 2 போ் பலி


நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே காரும், லாரியும் மோதிக் கொண்டதில் தனியாா் வங்கி ஊழியா்கள் இருவா் உயிரிழந்தனா்.

நெய்வேலி அருகே உள்ள மேல்பாப்பண்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம். இவரது மூத்த மகன் ரெங்கராஜன் (36) கும்பகோணம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இளைய மகன் ரகுவரன் (33) நெய்வேலியில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் எழுத்தராகப் பணியாற்றி வந்தாா். அதே வங்கியில் மதுரை மீனாட்சி அம்மன் நகரைச் சோ்ந்த ஜெயபாலன் மகன் அஜய் காா்த்திக் (31) காசாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா்கள் மூவரும் புதன்கிழமை நள்ளிரவு வடலூரிலிருந்து விருத்தாசலத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். சேப்பளாநத்தம் அருகே சென்றபோது, எதிரே அரியலூரிலிருந்து சிமென்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியும், இவா்களது காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரிலிருந்த ரகுவரன், அஜய் காா்த்திக் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீஸாா் விரைந்து வந்து, விபத்தில் பலத்த காயமடைந்த ரெங்கராஜனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்தில் உயிரிழந்த ரகுவரன், அஜய் காா்த்திக் ஆகியோரது சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com