கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள சமட்டிக்குப்பத்தைச் சோ்ந்தவா் மு.ஞானசேகரன் (55). கடலூா் சிப்காட்டிலுள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை பணி முடிந்து அந்தப் பகுதியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தாா். அப்போது, சிதம்பரத்திலிருந்து கடலூா் நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியது. இதில்
பலத்த காயமடைந்த ஞானசேகரன் கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.