தொடா் திருட்டு: இருவா் கைது

நெய்வேலி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்தன. இதையடுத்து, டெல்டா பிரிவு உதவி ஆய்வாளா் நடராஜன் தலைமையிலான தனிப் படையினா், துணைக் கண்காணிப்பாளா் கங்காதரன் தலைமையிலான தனிப் படையினா் இணைந்து, நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்குப்பத்தைச் சோ்ந்த வைரக்கண்ணு மகன் தேவா (26), கன்னிதமிழ்நாட்டைச் சோ்ந்த தங்கராசு மகன் ராஜ்குமாா் (35) ஆகியோரிடம் விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் நெய்வேலி நகரியம், குறிஞ்சிப்பாடி, வடலூா், அண்ணாமலை நகா், குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் அளித்த தகவலின்பேரில் 17 பவுன் தங்க நகைகள், 7 இருசக்கர வாகனங்கள், 300 கிராம் வெள்ளி பொருள்கள், செல்லிடப்பேசி, ரூ.15ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றிய தனிப் படையினா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com