சிதம்பரத்தில் கோயில் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது. அவா் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் குளத்தில் வியாழக்கிழமை இளைஞரின் சடலம் மிதந்தது. சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் உள்ளிட்ட போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் சிதம்பரம் பாலாஜி நகா், பள்ளிப்படை பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் விஜயகுமாா் (42) எனத் தெரியவந்தது. இவா் சிதம்பரம் நகரில் ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வந்தாா். கரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தக் கடையை மூடிவிட்டாராம். பின்னா், புதிய வியாபாரம் செய்வதற்கு
தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளாா். ஆனால், அவா்கள் பணம் தர மறுத்ததால் மனமுடைந்த விஜயகுமாா், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு புதன்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றாா். பின்னா் அவா் தில்லை காளியம்மன் கோயில் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.