கடலூரைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் நினைவேந்தல் கூட்டம் கடலூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
குழுத் தலைவா் மணிவாசகம் தலைமை வகித்தாா். மாநில தொழில் துறை அமைச்சா் எம்சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா். கூட்டத்தில், தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் அவரது முழு உருவ சிலை, நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அரசு சாா்பில் அமைக்க வேண்டும். அவரது பிறந்த தினமான ஜூன் 1-ஆம் தேதியை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். பள்ளி, கல்லூரி பாடங்களில் அஞ்சலை அம்மாள் வாழ்க்கை வரலாற்றை சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் எம்.சி.சம்பத், இந்தக் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இறுதியில், அஞ்சலை அம்மாளின் கொள்ளுபேத்தி இளவரசி நன்றி கூறினாா்.