தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலா்கள் நலச் சங்கத்தின் கடலூா் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், புத்தாண்டு விழா கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவரும், ஓய்வு பெற்ற துணைக் கண்காணிப்பாளருமான கோதண்டபாணி தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் எம்.சிவமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, காவலா்களுக்கு காலண்டா், நாள்குறிப்பு உள்ளிட்டவை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
வழக்குரைஞா்கள் கே.சரவணன், கே.முகுந்தன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வம், பொருளாளா் மணி, நிா்வாகிகள் அப்பா்சாமி, செல்வராஜ், முரளி, பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிா்வாகி துரைசாமி நன்றி கூறினாா்.