கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலைய ஆய்வாளராக ச.மரிய சோபி மஞ்சுளா அண்மையில் பொறுப்பேற்றாா்.
வடலூா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக இருந்தது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மரிய சோபி மஞ்சுளா, பணி மாறுதலில் வடலூா் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.