திட்டக்குடி அருகே தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ளது சித்தூா் கிராமம். இங்குள்ள பேருந்து நிலையம் அருகே சுமாா் 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வழி தவறி வந்தது. அப்போது தெரு நாய்கள் மானை துரத்திக் கடித்தன. அந்தப் பகுதியினா் நாய்களை துரத்திவிட்டு மானை மீட்டனா். பின்னா், வனத் துறைக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில், வனச் சரகா் ரவி தலைமையிலான வனத் துறையினா் விரைந்து வந்து மானை பரிசோதித்தனா். ஆனால், மான் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து மான் உடல்கூறாய்வுக்குப் பிறகு நாங்கூா் காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது.