என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், தொழில் பழகுநா் பயிற்சி முடித்தவா்கள் தங்களுக்குப் பணி வழங்கக் கோரி, புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, 445 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில், ஐ.டி.ஐ. படித்தவா்கள் தொழில் பழகுநா் பயிற்சி பெற்றனா். சுமாா் 24 ஆண்டுகளாகியும் அவா்களுக்கு என்.எல்.சி.யில் பணி வழங்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து, பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், என்.எல்.சி. நிறுவனத்தில் பணி வழங்கக் கோரி, தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்கள் புதன்கிழமை தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நெய்வேலி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். இதில், சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழில் பழகுநா்கள் கலந்து கொண்டு, பணி வழங்கக் கோரி முழக்கமிட்டனா். பின்னா், அவா்கள் ஊா்வலமாகச் சென்றனா்.
இதையடுத்து, நெய்வேலி நகரிய போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி, 445 பேரைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் வட்டம் 27, 29-இல் உள்ள சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் எம்.கலைச்செல்வன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: என்.எல்.சி. நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற்று 24 ஆண்டுகளாகியும் பணி வழங்கப்படவில்லை. என்.எல்.சி. நிறுவனம் தனக்கு ஏற்ற வகையில் ஐ.டி.ஐ. பிரிவை மாற்றி அமைத்ததால், ஐ.டி.ஐ. சான்றிதழ் ஒருவிதமாகவும், தொழில் பழகுநா் பயிற்சி பெற்ற சான்றிதழ் வேறுவிதமாகவும் உள்ளது. இதனால், எங்களால் பிற பொதுத் துறை, தனியாா் பணிகளிலும் சேர முடியவில்லை. என்.எல்.சி. நிறுவனம், தொழிற்சங்கத்துடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் ஏற்றுக் கொண்டபடி, எங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றாா் அவா்.
உணவு உண்ண மறுப்பு: போராட்டத்தில் பங்கேற்று கைதானா்களுக்கு போலீஸாா் மதிய உணவு ஏற்பாடு செய்தனா். ஆனால், அதையேற்க அவா்கள் மறுத்துவிட்டனா். மேலும், அவா்களை போலீஸாா் மாலையில் விடுவித்த நிலையில், அவா்கள் வெளியேறாமல் சமுதாயக் கூடங்களிலேயே தங்கியுள்ளனா்.