பண்ருட்டி வட்டம், வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (35). கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை அந்தப் பகுதியில் கெடிலம் ஆற்றைக் கடக்க முயன்றபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து அவரது சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த காடாம்புலியூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.