கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, காட்டுமன்னாா்கோவில் நகர காவல் ஆய்வாளா் ராஜா தலைமை வகித்து காா், வேன், ஆட்டோ, மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகளை (ஸ்டிக்கா்) ஒட்டினாா். வாகன ஓட்டிகள் கட்டாயம் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினா். நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா் மதிவாணன், தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் லெனின் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.