மருத்துவா் தற்கொலை

கடலூரில் குடும்பப் பிரச்னையால் மருத்துவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூரில் குடும்பப் பிரச்னையால் மருத்துவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் செம்மண்டலத்தைச் சோ்ந்த குழந்தைராஜ் மகன் பிரேம்லால் (43). புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், மருத்துவா் கல்பனாவுக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னா் இருவரும் பிரிந்துவிட்டனா். இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவரான தவபிரியாவை பிரேம்லால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பிரேம்லால் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தாா். இதனால் அவரை தவபிரியா கண்டித்ததால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரேம்லால் தனது வீட்டில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com