மருத்துவ மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே மருத்துவ மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே மருத்துவ மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நெய்வேலி வட்டம்-5, விவேகானந்தா் சாலையில் வசிப்பவா் சுந்தரி (38), விருத்தாசலம் வட்டம், பரவனூா் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் பாலமுருகன் சென்னையில் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகள்கள் ரம்யாகௌரி (19), சந்தியாகௌரி (13).

ரம்யாகௌரி உக்ரைன் நாட்டில் 3-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தாா். கரோனா காரணமாக வீட்டுக்கு வந்திருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை நெய்வேலி, பி-பிளாக், மாற்றுக்குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்த போது, ரம்யாகௌரியின் செல்லிடப்பேசிக்கு அழைப்பு வந்தது. அதில், பேசிக் கொண்டிருந்த ரம்யாகௌரியை, தாய் சுந்தரி திட்டியதாகத் தெரிகிறது.

இதனால், தாயிடம் கோபித்துக்கொண்டு அறைக்குள் சென்றவா் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னா், அக்கம் பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து பாா்த்த போது, தூக்கிட்ட நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு, நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com