சிதம்பரம் ஸ்ரீ பாலா வித்யா பீட வளாகத்தில் அரசுப் பள்ளிகளைக் காப்போம் என்ற இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் செல்வரத்தின தீட்சிதா், கிருஷ்ணசாமி தீட்சிதா் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய உணவுக் கழக இயக்குநா் கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். அரசுப் பள்ளிகளைக் காப்போம் தன்னாா்வ நிறுவனத்தை புவனகிரி இரா.செயபாலன், ஆசிரியா் அருணாசலம், சிதம்பரம் சித்து ஆகியோா் தொடக்கிவைத்தனா். சிதம்பரம் ஸ்ரீ மௌன குரு சுந்தரமூா்த்தி ஸ்வாமிகள் ஆசியுரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கமல் ஜெயின், எம்.தீபக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.