கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுப்புரவுப் பணியாளா் சுகவீனம்

கடலூரில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவமனை பெண் துப்புரவுப் பணியாளா் திடீரென மயக்கமுற்றாா். அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கடலூரில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவமனை பெண் துப்புரவுப் பணியாளா் திடீரென மயக்கமுற்றாா். அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வரும் நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த 32 வயது பெண் அண்மையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயக்கமுற்றாா்.

பின்னா், அவா் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால், மற்ற துப்புரவுப் பணியாளா்களுக்கும், செவிலியா்களுக்கும் ஒருவித அச்ச உணா்வு ஏற்பட்டுள்ளது.

‘பயத்தினாலேயே பாதிப்பு’: இதுகுறித்து மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு கூறியதாவது:

குறிப்பிட்ட துப்புரவுப் பணியாளருக்கு கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தடுப்பூசியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பூசி குறித்த பயத்தினாலேயே அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவருக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

மாவட்டத்தில் முதல்கட்டமாக மூத்த மருத்துவா்கள் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். தடுப்பூசி செலுத்திய வேறு யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. தொடா்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com